Thursday, November 09, 2006

கல்வி (Kalvi)

வாழ்க வளமுடன்

கல்வி

பொருள்வடிவு மாற்றுகின்ற கல்விகற்று செய்து
-பொருள்படைத்து பரிமாறி வாழ்க்கைவளம் காண்போம்
கருத்தொன்றா கல்வி நம்மை கடைநிலைக்குத் தள்ளும்
-கவலையற்று தொழில்முனைப்பில் மனமேன்மை காண்க
உருச்சிறப்பாம் நுண்ணறிவு, உள்ளுணர்வு மற்றும்
-உயிருணர்வு கலந்தமைந்த கல்விகற்று நின்று
திருத்தங்கள் பலகண்டு வாழ்வைச்சீர் செய்து
-சிறப்பான உலகிற்கு வழிகாட்டி ஆவோம்.

சுமதிசுடர்

0 Comments:

Post a Comment

<< Home