திருமண வாழ்த்து(Thirumana Vaazhththu)
வாழ்க வளமுடன்
திருமண வாழ்த்து
இருகுடும்ப இணைப்பிற்கு பாலமாய் ஓர் குடும்பம்
-இன்றிலிருந்து உமதுகையில் புகழ்பரப்பும் பொறுப்பு
வருமானம், சேமிப்பு, செலவுவகை கண்டு,
-வரும்போகும் விருந்தினரை உபசரித்து மகிழ்ந்து,
விருதுபெற்று, கல்வியினால் சமுதாயம் காத்து,
-வியன் உலகை வலம்வந்து குழந்தைசெல்வம் உயர்த்தி,
அருட்துணையால் அகவாழ்வில் மேன்மைகண்டு நீங்கள்
-அறவாழ்வில் சிறந்தோங்க மனம்குளிர்ந்த வாழ்த்து.
சுமதிசுடர்
0 Comments:
Post a Comment
<< Home