Tuesday, December 12, 2006

நூலகம் காண் (Library)

வாழ்க வளமுடன்

நூலகம் காண்

பாடதிட்ட எல்லைமீறிக் கற்கவேண்டும் குழந்தாய்!
-பலகால மனிதவாழ்வின் பெற்றியெல்லாம் உனக்கே;
நாடியன்றோ பெருக்கவேண்டும் நாம் ஏற்கும் அறிவை
-நல்லுலகம் வேண்டியன்றோ நாட்டிவைத்தார் எழுத்தில்.
வேடிக்கை விளையாட்டாய் நீகல்வி ஏற்று
-விரிந்தாய்ந்து வியனுலக சிறப்புகண்டு மகிழ்க.
தேடிப்பார்! துணை நிற்கும் திரு நூலைக் காண்பாய்
-தேக்கிவைத்து நூலகம் காண்! தெளியு(ம்)வரைப் பயனாம்.

சுமதிசுடர்

0 Comments:

Post a Comment

<< Home