Tuesday, December 12, 2006

கல்வியின் கருப்பொருள்(Education)

வாழ்க வளமுடன்

கல்வியின் கருப்பொருள்

கற்றவர்கள், பொறுப்பேற்றோர் சரணடைய வேண்டும்.
-காசுபணப் போட்டிவிட்டு கரையேற வேண்டும்.
பிற்போக்கை, வீண்பகட்டைப் புறமொதுக்க வேண்டும்.
-பிணி நீக்கி, எளியோரைப் பேணிடவும் வேண்டும்.
விற்காமல், வீண்செயாமல் விரிந்தறிய வேண்டும்.
-விளைவறிந்து செயலாற்றி விளக்கிவிட வேண்டும்.
கற்றபின்னும் குறுகி நிற்கும் நிலைமாற வேண்டும்.
-கல்வியெனும் செல்வத்தின் கருப்பொருளே இதுதான்.

சுமதிசுடர்

0 Comments:

Post a Comment

<< Home