Tuesday, December 12, 2006

ஐந்தறிவு சாட்சி

வாழ்க வளமுடன்

ஐந்தறிவு சாட்சி

பறவைகளும் விலங்குகளும் தன்னினத்தைப் பேணும்
-பாங்குகளைப் பலமுறைப்பார்த் துப்பார்த்து மகிழ்ந்தேன்.
பிறயினத்திற்(கு) உணவாகும், எதிரியாகும், இருந்தும்
-பிறப்பளித்துப் பயிற்றுவித்து மகிழ்ந்தொன்றி வாழும்
சிறகுமுற்றா குஞ்சுக்கு செரிக்கவைத்த உணவு,
-சீரழிக்கும் மற்றினத்தார் இடமிருந்து காப்பு,
மறக்கவொண்ணா இசையெழுப்பி அழகுகாட்டித் திரியும்
-மக்களெல்லாம் தனையுணர ஐந்தறிவு சாட்சி.

சுமதிசுடர்

0 Comments:

Post a Comment

<< Home