Friday, January 02, 2015

சித்தநெறி போதும்

போரிட்டோம் அடிமையானோம் வரலாறாய் கண்டோம்;
  போதாத மனம்விரியா வாழ்வியலின் பாடம்;
யாரிடமும் சினங்கொண்டு இனிநீட்ட வேண்டாம்;
  இருப்பவரில் நல்லவரின் துணைகிடைக்க உழைப்போம்;
நேரிடையாய் இனமொழிக்குள் நெருக்கத்தைப் பெருக்கி
  நீக்கமற மனிதகுலம் நிலைபெற்று வாழ
போரிடாமல் வென்றெடுக்கப் புரியவைப்போம் வாரீர்!
  புத்துலகை மீட்டெடுக்க சித்தநெறி போதும்.

சுமதிசுடர் 

0 Comments:

Post a Comment

<< Home