Wednesday, January 07, 2015

சான்றுகளைத்தேடு


உறங்காமல் தேடவேயிவ் வுயர்வான வாழ்வு;
   ஒருசிலரே விடைகண்டு வழிகாட்டி யானார்;
புறம்தேடி பொருள்பற்றி பெரும்பாலோர் வாழ்வர்;
   அகம்தேடி அருள்வழியில் சிறுபாலோர் வாழ்வர்;
அறமற்ற வணிகநோக்குப் பொருள்தேடும் வாழ்வில்
   அடுக்கடுக்காய் மனிதகுல சிக்கல்கள் பெருக்கம்;
சிறப்பான வாழ்வியலைத் தொலைத்துவிட்டோம் உலகீர்;
   சீர்மையொடு மீட்டெடுப்போம் சான்றெல்லாம் தேடி.

சுமதிசுடர்

0 Comments:

Post a Comment

<< Home