Sunday, January 04, 2015

வளம் பகிர்வோம்


வளங்களெல்லாம் கேட்காமல் இயற்கைதந்த கொடையே!
  வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ?
வளம்கொள்ள எல்லையேது? வரன்முறைகள் காண்போம்;
  வாழ்வறிந்து வாழ்ந்திடுவோம்; வாழவைப்போம் இணைந்து;
வளம்மறுத்தும் போர்காணா மனம்உயர்ந்த மக்கள்
  வாழ்வதற்கு வாய்ப்பளித்து மானுடத்தில் மகிழ்வோம்;
எளிமையினை கடைபிடித்து பொருள்கொள்ளல் குறைப்போம்;
  எல்லையின்றி அருட்கருத்தை சொல்செயலில் பகிர்வோம்.

சுமதிசுடர் 

0 Comments:

Post a Comment

<< Home