Wednesday, January 07, 2015

கற்றால்தான் மேன்மை


கற்காமல் மனிதகுல மேன்மையென்ப தில்லை;
   கற்றவர்கள் வழிநடத்த வாழ்வதுதான் உயர்வு;
கற்குமாவல் உள்ளோர்க்கு வழிகாட்டி விடுவோம்;
   கற்குமாவல் பெருக்கெடுக்கும் செயல்திட்டம் காண்போம்;
கற்பதெனின் எண்ணெழுத்தைப் படித்தெழுதி முடித்து
   கணக்கற்ற ஆய்வுசெய்யும் கருத்துநிலை செல்லல்;
கற்றவற்றைப் படைப்பாக்கி திரட்சியினைக் காண்போம்;
   கற்றபடி நின்றிடுவோம் புதுவாழ்வு பிறக்கும்.

சுமதிசுடர்

0 Comments:

Post a Comment

<< Home